வேலூர் மாவட்ட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படைத் திறன்வளர் பயிற்சி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 September 2023

வேலூர் மாவட்ட தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படைத் திறன்வளர் பயிற்சி.


வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.மணிமொழி அவர்களின் அறிவுரையின்படி  அடிப்படைத் திறன்களை உறுதிப்படுத்திட பள்ளிக்கான பொறுப்பாசிரியருக்கு  பயிற்சி  13.09.2023 அன்று காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்கள் பள்ளியில் பணிபுரியும் ஆர்வமுள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அங்குலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றல் அடைவை அதிகரிக்கும் நோக்கம் குறித்து அவர் பேசினார். கூட்டத்தில் கருத்தாளர்களாக சலவன்பேட்டை, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திருமதி.கலைவாணி  கற்பித்தலில் கையாள வேண்டிய எளிய முறைகளை விளக்கி கூறினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.ஜோதிபாஸ், திரு.கன்னியப்பன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவிதிட்ட அலுவலர் எம்.மகாலிங்கம், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அதிசயநாதன் பள்ளி த்துணை ஆய்வாளர் ஆ.மணிவாசகம், எ.சைனிமோல், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, எ.ஜெயதேவரெட்டி, லதா, கோ.சரளா, கே.பேபி, சரஸ்வதி, தாமோதரன், அ.சிவக்குமார், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கோ.பழனி, எஸ்.சிவ்வடிவு, கேசவன், சுரேஷ் ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட மாவட்டத்தில் உள்ள 158 பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad