பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 October 2023

பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கிழக்கு உள்வட்டம் கொண்ட சமுத்திரம் கிராமம் ராஜா கோயில் பகுதியில் சா்வே எண்  54 /1 பரப்பளவு 59.5 ஏர்ஸ் நிலத்தில் பாசன நீர் சேகரிக்கும் 8-அடி ஆழமுள்ள தொட்டியில் குடியாத்தம் ஆர் எஸ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் தமிழரசன் (வயது 16) த / பெ வேல்முருகன் தொட்டியில் குளிக்க வந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் படிக்கும் 6 பள்ளி மாணவர்களுடன் வந்துள்ளார் என தெரிய வருகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இறந்த தமிழரசன்  உடல் கூறு ஆய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad