குரங்கு தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

குரங்கு தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.


வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காடு கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துக் கொண்டு வருகிறது. வீட்டில் உள்ள இருக்கின்ற உணவு பொருட்களையும், வெளியே மரம் செடி கொடி கனிகளையும் சாப்பிட்டு விடுகிறது. அதைப் பிடித்து காட்டில் விடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சேர்க்காடு கிராமத்தில் சாலை வசதி அதாவது தெருகளில் சாலை போட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகிவிட்டது அந்த சாலைகள் எல்லாம் பழுதடைந்து குண்டன் குழியுமாக உள்ளது அதை சரி செய்து புதிய சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு  சின்னத் தெரு to ஏரிக்கரை வழியாக செல்லும் சாலை (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு) மற்றும் திருவலம் வாலாஜா ராணிப்பேட்டை போன்ற ஊர்களுக்கு வேலைக்கு செல்வோர் அந்த வழியை பயன்படுத்த புதிய சிமெண்ட் சாலை அமைத்தல்


சேர்க்காடு கிராமத்தில் கால்வாய்கள் பகுத்தறிந்து விட்டது மணி நேரங்களில் கால்வாய்களில் உள்ள நீர் தெருக்களில் வந்து விடுகிறது மற்றும் சின்ன தெருவில் குடிநீருடன் கால்வாய் நீர் கலப்பது போன்ற PIPE VALVE உள்ளது. அதையெல்லாம் சரி செய்து புதிய கால்வாய் அமைத்துத் தருமாறு மெர்வின் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உடன் மோகன், M. வசந்த குமார், W. வசந்த குமார், சாமுவேல், சுபாஷ் உடன் இருந்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad