வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த லத்தேரி கிராமத்தில் இன்று டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (20.11.2023) நடைபெற்ற சிறப்பு பட்டா முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு 684 பயனாளிகளுக்கு ரூ.2.82 கோடி மதிப்பில் பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. பி. நந்தகுமார், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, காட்பாடி பெருங்குழு தலைவர் வேல்முருகன் துணை மேயர் மா.சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஒன்றியக்குழு தலைவர் ரவிசந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment