குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் நீரில் மூழ்கி மூத்தாட்டி பலி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 November 2023

குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் நீரில் மூழ்கி மூத்தாட்டி பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டி கம்பிகள் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில் பள்ளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது.


செக்கு மேட்டு தெரு சந்தப்பேட்டை பகுதியில் வசித்து வந்த காலம் சென்ற குமரேசன் என்பவரின் மனைவி நீலம்மாள் (வயது 65 )என்பவர் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் கிடைத்தவுடன் நகர போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad