வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் உள்ள அத்தி செவிலியர் கல்லூரியில் 20-11-2023 இன்று குழந்தைகள் உரிமை தினத்தையொட்டி ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா குழந்தை தொழிலாளர்கள் முறையை அகற்றும் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் உரிமை குறித்து விழிப்புணர்வு மற்றும் மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கல்பனா மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹமீம் ரீஷானா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் குமரவேல் அவர்கள் அனைவரும் வரவேற்றார், விரிவாக்க அலுவலர் ஜமுனா அவர்கள் குழந்தை திருமணம் பற்றி எடுத்துரைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ் குழந்தைகள் உரிமைகள் பற்றி பேசினார். காவல் உதவி ஆய்வாளர் அஜந்தா பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார் குழந்தைகளுக்கான உதவிகளைப் பற்றி எடுத்துரைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டார்கள் இறுதியில் மகாலட்சுமி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment