பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 November 2023

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.


வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கே வி குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம் என்பவர் சாய் குருஜி என்ற தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சரியாக படிக்கவில்லை என்று சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார் மேலும் பெற்றோரை அழைத்து வந்து T C வாங்கிச் செல்லுங்கள் என்று என்று கூறியுள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் நவம்பர் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

கே வி குப்பம் போலீசார் முற்றிலும் தவறுகளை மறைத்து குடும்ப பிரச்சினை காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என்று பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் மாணவன் தற்கொலைக்கு காரணமான பள்ளி தாளாளர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின்  கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் கேட்டு மாணவன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண வழங்க கேட்டு சாய் குருஜி பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நவம்பர் 25 ஆம் தேதி இன்று மாலை 5 மணி அளவில் கே வி காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி ஜனநாயக அமைப்புகள் உறவினர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் F I R யை மாற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என கூறினர்.




குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad