புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 December 2023

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம்.


வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்  இன்று (24.12.23) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில்  சத்துணவு தந்த சரித்திர நாயகன் பொன்மனச் செம்மல் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நகர கழக செயலாளர் அண்ணன் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர்  V.ராமு, நகர கழக செயலாளர்  J.K.N.பழனி ஆகியோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர்.

முன்னதாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர்  V.ராமு, நகர கழக செயலாளர்  J.K.N.பழனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் S.L.S. வனராஜ், T. சிவா, கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M. பூங்கொடி மூர்த்தி, அருண் முரளி, Kஅமுதா கருணா, V.N.தனஞ்செயன், M.பாஸ்கர், S.I. அன்வர் பாஷா, M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், R.K.மகாலிங்கம், S.D. மோகன்ராஜ், S.S.ரமேஷ் குமார், C.K. வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், A.தண்டபாணி, A. சிட்டிபாபு மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad