மறைந்த ஜெயலலிதா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 December 2023

மறைந்த ஜெயலலிதா அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.


வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த செல்வி ஜெயலலிதா  அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி  இன்று (05.12.23) காலை 9.30 மணி அளவில் காமராஜர் சிலை அருகில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு கழக அமைப்பு செயலாளர் V.ராமு, நகர கழக செயலாளர் J.K.N.பழனி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னதாக பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர்  எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் S.L.S.வனராஜ்,  மாவட்ட கழக நிர்வாகிகள் S.அமுதா சிவப்பிரகாசம், காடை G.P.மூர்த்தி, நகர கழக நிர்வாகிகள் R.K.அன்பு, A.ரவிச்சந்திரன், M.பாஸ்கர், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, V.N.தனஞ்செயன், S.N.சுந்தரேசன், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் அருண் முரளி, மாவட்ட சார்பணி செயலாளர்கள் S.I.அன்வர் பாஷா, B.H.இமகிரி பாபு, S.S.ரமேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், A.தண்டபாணி, A.சிட்டிபாபு  மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள்  சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad