வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 December 2023

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டம்.


வேலுாா் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு வட்டாட்சியர் சித்ராதேவி தலைமைதாங்கினார். கூட்டத்தில் ஆதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சந்தோஷ்உதவி வேளாண்மை துறை அலுவலர் உமா சங்கர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நீர்வளத்துறை பணி ஆய்வாளர் சிவாஜி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் பிரபுதாஸ் வனத்துறை சதீஷ்குமார் துயர் துடைப்பு பிரிவு பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.


பாரத பிரதமர் மோடி அவர்களால் சிறந்த விவசாயி என பாராட்டு பெற்ற நத்தம் சம்பத் நாயுடு அவர்களை வட்டாட்சியர் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பல்ல குப்பத்திலிருந்து அகரம் சேரி சாலையில் உள்ள மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும். குடியாத்தம் முதல் பலம்நேர் சாலையை பழுது பார்க்க வேண்டும்.

கல்லபாடியை சேர்ந்த இந்திராணி என்பவர் தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்றும் குரங்கு தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழை வெள்ளம் சேதாரம் தொடர்பாக பொதுப்பணித்துறையினர் மேற்கொண்ட பணிகள் விவரம் சிங்கல்படி தோட்டாலம் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad