வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ குமாரவேல் பாண்டியன் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதிதமாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதிகஆர்த்தி திட்ட இயக்குனர் ம நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கலியமூர்த்தி ஆதிதிராவிடர் நலத்துறை நல அலுவலர் ராமச்சந்திரன். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment