வேலூர் மாநகராட்சி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 December 2023

வேலூர் மாநகராட்சி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.


மக்களுடன் முதல்வர் திட்டத்தை திங்களன்று கோவையில் தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியான 1-வது மண்டலம் காட்பாடி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார், திட்ட இயக்குநர், 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொறியாளர் செந்தில், 1-வது வார்டு கவுன்சிலர் அன்பு மற்றும் மண்டல திமுக கவுன்சிலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் 1 -வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் பார்த்தசாரதி நன்றி கூறினார்


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்... 

No comments:

Post a Comment

Post Top Ad