வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செவிடந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரு டைய மகள் சசிகலா, பூட் டுத்தாக்கும் மாங்குப்பம் கிராமத்தில் ராணுவ வீரர் உதயன் என்பவருடன் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் தன் மாமியார், மாமனார் உடன் வசித்து வந்தார். இவருக்கு 2 ஆண்பிள்ளைகள் உள்ளனர்.
ராணுவ வீரர் உதயன் இவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு குடும்பத்தை கவனிக்காமல் வீட்டுச் செலவுக்கும் பணம் தராமல் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சசி கலா தன் கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளையும் தவிக்க இவர்களுடைய மாமனார் மனோகரன், மாமியார் வேண்டா ஆகியோர் சசிகலாவை பல ஆண்டுகளாக கொடு மைப்படுத்தி துன்புறுத்தி வந்து ள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலா வுடைய கணவர் உதயன் இரு குழந்தைகளையும் தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அக் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment