குடியாத்தம பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமார வேல் பாண்டியன் புதன்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பேர்ணாம்பட்டு ஒன்றியம், பொகளூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், ரூ. 11.97 லட்சத்தில் கட்டப்ப டும் அங்கன்வாடி மையக் கட்டடம், மாநில 15-ஆவது நிதிக்குழு மானியத்தின்கீழ், ரூ. 8.68 லட் சத்தில் கட்டப்படும் கழிவுநீர்க்கால்வாய் ஆகியவற்றை பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் சுரேஷ்கு மார், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஹேமலதா, எழிலரசி, ஒன் றிய திமுக செயலாளர்கள் பொக ளூர் ஜனார்த்தனன், டேவிட், ஒன்றியப் பொறியாளர் பிரமிளா, பணிப் பார்வையாளர் கணேஷ் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment