மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.,.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.சேகர், கணினி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் ஜி.கோபி, உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஷாநவாஷ், வேளாண் ஆசிரியர் சங்க மாநில செயலாளர் இ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.சீனிவாசன், ஜி.சீனிவாசன், மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.செல்வகுமார், ஆர்.ஜெயக்குமார், கே.சங்கர், ஜிடி.பாபு, பெ.இளங்கோ, அல்போன்ஸ்கிரி, வேலு, எம்.எஸ்.தீனதயாளன், சுமதி, எம்.சினேகலதா, மகேஸ்வரி, ராஜ்குமார், வேந்தன், விஜயன், தமிழ்செல்வன், ஜெ.சுந்தர், கோட்டீஸ்வரன், பாண்டியன், ஆ.ஜோசப்அன்னையா, ரஞ்சன் தயாளதாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காலை 10 மணியவில் குழுமிய 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தமிழக அரசே, தமிழக அரசே தேர்தல் கால வாக்குறுகளை நிறைவேற்று நிறைவேற்று, ரத்து செய் ரத்து செய் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து நடைமுறை படுத்து நடைமுறை படுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்து என கோஷங்களை எழுப்பினர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் காவல் ஆய்வாளர் சத்துவாச்சாரி ரவி, வேலூர் வடக்கு சீனிவாசன், பாகாயம் சங்கர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் 400 பேரை கைது செய்து அலமேலு ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்பத்தில் வைத்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது. இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் அவர்களில் 400 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு போராடும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் இல்லை எனில் பிப்ரவரி மாதம் 10ஆம் மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம் மேலும் பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும் பிரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தள்ளப்படுவோம் எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றார்.
கோரிக்கைகள்:
- பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
- 21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்
- 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்து அலமேலுமங்காபுரம் சிவசக்தி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ ஜியோ பேரமைபினர் அனைவரும் மாலை 6.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்


No comments:
Post a Comment