நண்பர்கள் டிரஸ்ட் சைதாப்பேட்டை கிளையின் சார்பில் 75 வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

நண்பர்கள் டிரஸ்ட் சைதாப்பேட்டை கிளையின் சார்பில் 75 வது குடியரசு தின விழா.


வேலூர் மாநகர் சைதாப்பேட்டை பகுதியில் நண்பர்கள் டிரஸ்ட் கிளையின் சார்பில் இந்திய தேசத்தின் 75 வது குடியரசு தின நிகழ்ச்சி கிளை செயலாளர் முஹம்மத் ரபி தலைமையில் நடைப்பெற்றது. தேசிய கொடியை சமூக ஆர்வலர் சகோதரர் ஜப்ருல்லாஹ் அவர்கள் ஏற்றிவைத்தார்.

 

நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மதரஸாயே தாரூல் ஹஸனாத் மாணவர்களின் தற்காப்புகலை சிலம்பம், கராத்தே, நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.


சிறந்த மாணவர்களுக்கு டிரஸ்ட்டின் சார்பாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஜனாப், மஹபூப் பாஷா, ஜனாப், நவாப் ஜான், பட்டேல் நவ்ஷாத், திரு. பாலாஜி, திரு. சிவா, ஜனாப் அயாத் பாஷா, சகோ. ஜாபர், சகோ. கவுசி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த கிளை நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், அத்தீக் அஹ்மத், அப்துல் கைசர், இர்பான், ஹாதிபாஷா, மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad