காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 January 2024

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.


வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம் சுனில் குமார் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று 12.01.2024  வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா, தலைமையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. 


வேலூர் மாநகராட்சியின் துனை மேயர் எம்.சுனில்குமார், ஒன்றாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று 1500 மாணவிகளுக்கு சர்கரை பொங்கல் வழங்கினர். 


இந்த நிகழ்வின் போது பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் லோகநாதன் மகேந்திரன், பாலாஜி, நந்தகுமார்,  மாநகராட்சி உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், சித்ராமகேந்திரன், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, துணைத்தலைவர் கௌதமி பள்ளி உதவித்தலைமையாசிரியர்கள் எம்.மாரிமுத்து, கே.திருமொழி, பி.ரோசலின் பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், நாட்டுபுற நாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் தூய்மை படுத்தப்பட்டு பள்ளி மாணவிகள் அனைவரும் இணைந்து வண்ண வண்ண கோலமிட்டு செங்கரும்பு வைத்து புதுப்பாணையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என வின்னதிர முழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து வருகை தந்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad