பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ - ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதென குடியாத்தம் பேர்ணாம்பட்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
28.01.2024 காலை 10 மணியளவில் குடியாத்தம் பள்ளியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயகாந்தன், என்.சகேயுசத்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் எ.திருஞ்ஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.சேகர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் எஸ்.காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குடியாத்தம் வட்டார தலைவர் என்.சங்கர், செயலாளர் சையத் ஆசிப்வத்தின், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கோட்டீஸ்வரன், பட்டதாரி ஆசிரியர் கழக வட்டார தலைவர் கவிஞர் முல்லை வாசன், கோ.சீனிவாசன், வ.பழனி, பாலசந்தர், என்.ராஜ்குமார், எஸ்.திவ்யபிரபு, ஜி.காசிவிசுவநாதன், தி.பாரத் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடியாத்தம் பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் 30.01.2024 செவ்வாய்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறும் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
கோரிக்கைகள்
- பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
- முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
- 21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment