வேலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கழக பொதுச்செயலாளர், நீர்வளம், சட்டமன்றம், கனிமம், மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு பச்சரிசி சர்க்கரை கரும்பு 1000 ரூபாய் இலவச வேட்டி சேலை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ பி நந்தகுமார் குடியாத்தம் எம்எல்ஏ அமுல் விஜயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் எம் சுனில் குமார் பன்னிரண்டாவது வார்டு மாமன்றஉறுப்பினர் டீட்டா சரவணன் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment