வேலூர் கொசப்பேட்டை உத்தர மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியின் 38ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இவ்விழாவிற்கு ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் ச.ச்ச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
ஆண்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் சூர்யா தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் லாவண்யா வரவேற்று பேசினார். ஆசிரியை வி.ஆர்.அருட்செல்வி, வி.ஆர்.சிவா, பேபிபிரியா, அருண், ஆனந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது. காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் ச.சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகள் வழங்கி பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment