வயது முதிர்வு காரணமாக இயற்கை எழுதிய மூதாட்டியின் கண்கள் தானம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 27 February 2024

வயது முதிர்வு காரணமாக இயற்கை எழுதிய மூதாட்டியின் கண்கள் தானம்.


குடியாத்தம் ரோட்டரி சங்க ஆம்புலன்ஸ் வாகன முன்னாள் பொறுப்பாளரும் சங்க முன்னாள் செயலாளருமான கே குணசேகரன் அவருடைய தாயார் கே ராணி அம்மாள் வயது (81 வயது) முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அம்மையாரின் கண்கள் மகன் ஒப்புதலுடன் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இதைக் குறித்து முதல் தகவல் சங்க மூத்த சாசன உறுப்பினர் மருத்துவர் M S திருநாவுக்கரசு அவர்களிடம்  கண்கள் தானமாக வழங்கினார். நிகழ்வில் உறுப்பினர்கள் முன்னாள் சங்கத் தலைவர் T N ராஜேந்திரன் k சுகுமார்  P சிவக்குமார், K A முரளி ஆகியோர் உடன் இருந்தனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்க கண் மற்றும் உடன் தான குழு தலைவர் M R மணி ஏற்பாடு செய்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad