பள்ளி மாணவர்கள் காட்டாமணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 February 2024

பள்ளி மாணவர்கள் காட்டாமணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம்.


பேரணாம்பட்டு வட்டம் மற்றும் உள்வட்டம் குண்டலபள்ளி கிராமத்தில் ஐ .இ .எல் .சி துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் அருகில் உள்ள காட்டாமணி செடியில் உள்ள காய்களை  கடந்த 15.02.2023 அன்று மாலை சாப்பிட்டதால்  வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பள்ளி மாணவர்கள் எட்டு நபர்களையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் விவரம்:
           
  1. சுமித்ரா த/பெ நெல்சன் (வயது 8).
  2. தியா நான்சி த/பெ   பெஞ்ஐமின் (வயது 8),
  3. ரியா மன்சி த/பெ பெஞ்ஐமின் (வயது 6),
  4. ஐபேஷ் ஜெய்கன் ராஜ் த/பெ நித்யராஜ் (வயது10) 
  5. ராபேல் த/பெ நித்யராஜ் (வயது 8)
  6. ஜெசி ஜெரினா த/பெ (வயது 7),
  7. கீர்த்தனா த/பெ பார்த்திபன் (வயது 11),
  8. பிரபாகரன் த/பெ பார்த்திபன் (வயது 8) 
மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நல்ல நிலையில் உள்ளார் என விசாரணையில் தெரிய வருகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு  காணப்பட்டது.


- செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad