வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் மத்தேட்டிபல்லி கிராமத்தில் வசித்து வந்த துரைசாமி என்பவரின் மகன் லட்சுமணன் (வயது 50) இருளர் இனத்தைச் சேர்ந்த இவர் கிணற்று அருகில் இருக்கும் போது வலிப்பு நோய் வந்ததால் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.
இறந்த லட்சுமணன் என்பவருக்கு ரமிலா வயது 45 என்ற மனைவியும் விஜய் அருணா கிரன் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். தகவல் கிடைத்தவுடன் கிராமிய போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment