மேலும் அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்ந்திடும் வகையில் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. “தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். என்ற அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை மேலும் உயரும் இதன் மூலம் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பெறுவர் இத்திட்டத்தினை வரவேற்கின்றோம்.
ஆனால் மேல்நிலைப்பள்ளிகளில் தெழிற்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்திட வேண்டுகின்றோம். மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைத்து பேசியதன் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படும், முடக்கப்பட்டுள்ள ஈட்டியவிடுப்பு சரண் செய்து பணமாக்கும் நடைமுறை மீண்டும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து எதிர்பார்புகளுடன் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வரும் என எதிர்பார்கின்றோம்.
அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment