ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் முப்பெரும் விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 February 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் முப்பெரும் விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் உள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வரா நர்சரி & பிரைமரி பள்ளியின் 38  ஆம் ஆண்டு முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 38ம் ஆண்டு விழா U K G மற்றும்  5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி டாலர் மற்றும் ( mementos ) நினைவு பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முப்பெரும் விழாவிற்கு பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் ஜேஜி தலைமையேற்று UKG மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி தலைமையுறையாற்றினாா். முன்னதாக அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர்  D திருமால் மருமகன் வரவேற்றார், உதவி தலைமை ஆசிரியை  R புஷ்பா ஆண்டறிக்கை வாசித்தார்.


கேப்டன்  பெ கேசவேலு பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார், விஜய் ஆனந்த் தலைமை ஆசிரியர் அரசினர் மேல்நிலைப்பள்ளி கொசவன் புதூர் மாணவர்களை வாழ்த்தி 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி மாணவர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு வி ஏ மது பாபு ஏ எம் அபூபக்கர் எம் எஸ் ராஜசேகர் மற்றும் ஏஜே பத்ரிநாத் ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள். இறுதியில் உதவி தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad