ஆன்லைனில் பணத்தை இழந்த இருவரின் பணம் சுமார் ₹1,10,000 மீட்கப்பட்ட சைபர் கிரைம் உரியவர்களிடம் ஒப்படைப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 March 2024

ஆன்லைனில் பணத்தை இழந்த இருவரின் பணம் சுமார் ₹1,10,000 மீட்கப்பட்ட சைபர் கிரைம் உரியவர்களிடம் ஒப்படைப்பு.


வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர்  பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் சித்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிரெடிட் கார்டை activate செய்ய வங்கி விவரங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஏமாற்றி வங்கி கணக்கிலிருந்து சுமார்  ₹90,000 பணத்தையும், விரிஞ்சிபுரம் வல்லண்டராம் பகுதியை சேர்ந்த  சுரேஷ் என்னும் நபர் முகநூலில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும் என்ற பதிவை பார்த்து நம்பி, ₹20,000  பணத்தை செலுத்தி ஏமார்ந்துள்ளனர். 

இதனையடுத்து இவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த  வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் துரிதமாக இழந்த பணம் ₹1,10,000/- முழுவதும் மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் IPS அவர்களின் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.


இந்நிகழ்வில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் கி.புனிதா, காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார்  ஆகியோர்  உடனிருந்தனர்.



- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad