வேலூர் தமிழக குரல் செய்தி நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

வேலூர் தமிழக குரல் செய்தி நிறுவனம் சார்பில் மகளிர் தினவிழா


குடியாத்தம் மகளிர் தின விழா மற்றும் தமிழக குரல் குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன் பிறந்தநாள் விழா குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள எஸ்.டி.எஸ் திருமண மண்டபத்தில் இன்று  கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, 35வது வார்டு அதிமுக மேலவை பிரதிநிதி கே. வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.


அதிமுக நகர செயலாளர் ஜே.கே. என். பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி, ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவர் இரா. சி தலித் குமார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் வி.இ. கருணா, வி. என் கார்த்திகேயன், எஸ். இமயவர்மன், ஏ. ரவிச்சந்திரன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ் சேட்டு வரவேற்றனர்.

செய்தியாளர்கள் வேலூர் இன்பராஜ், கே விகுபேந்திரன், கே எஸ் அருண், சர்ச் பாதிரியார் மணி மைக்கில் எபிரேன், பரவக்கல் ஊராட்சி வார்டு உறுப்பினர் மகாலட்சுமி, 29 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன், மெடிக்கல் S.சரவணன், J.பாஸ்கர், கோணி ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் 100 மகளிர்களுக்கு சேலைகள், வாய் பேச திறனற்ற 25 நபர்களுக்கு லுங்கிகள் மதிய உணவு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. கேவி ராஜேந்திரன் இறுதியில் நன்றியுரைக் கூறி முடிக்கப்பட்டது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad