வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் உள்ளி அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் த/ பெ முனுசாமி (வயது 44) என்பவர் இன்று மாலை 4 மணி அளவில் மின்சாரம் மின்மாற்றியில் தவறுதலாக ஏறும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவருக்கு தனம் (வயது 34) என்ற மனைவியும் ஹரிஷ் (வயது 12 )என்கின்ற மகனும் காவியா( வயது 10) என்ற மகளும் உள்ளனர் .இருவரும் படித்து வருகிறார்கள் இறந்த நபர் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். இதைக் குறித்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மேற்படி நபரின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment