உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 127000 பறிமுதல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 6 April 2024

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 127000 பறிமுதல்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் விதியின் படி ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் மேல் எடுத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நெல்லூர் பேட்டை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் உரிய ஆவணம் என்று ரூபாய் ஒரு லட்சத்து 27 ஆயிரம் எடுத்துச் சென்றுள்ளார். பங்களா மேடு அருகே தேர்தல் பறக்கும் FSTடிம் படையினர் பெருமாள் தலைமையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டு இருக்கும்போது பணத்தை பறிமுதல் செய்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான சுபலட்சுமி முன்னிலையில் வட்டாட்சியர் சித்ராதேவி இடம் ஒப்படைக்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad