பாராளுமன்ற உறுப்பினரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மாவட்டத்திற்கு வருகை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 5 April 2024

பாராளுமன்ற உறுப்பினரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மாவட்டத்திற்கு வருகை.


வேலூரில் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். நரேந்திர மோடி கலந்து கொள்ளும் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அவர்கள் இன்று துவக்கி வைத்து பொதுக் கூட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டார்.

ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வருகை வேலூர் வருகை தரும்  பிரதமர் மோடிக்கு புதிய நீதி கட்சியின் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.


வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர்,பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஆகிய இடங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.


இந்தநிலையில் வரும் 10ம் தேதியன்று வேலூர் கோட்டையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad