வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனுார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவா இவரது மகன் அஜித்பாலாஜி (வயது 27) இவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக இவருக்கு சொந்தமான காரில் நேற்று மாலை தனியாக சென்று கொண்டிருந்தார்.
காத்தாடி குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டபாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் ஓட்டிவந்த அஜீத்பாலாஜிக்கு கை கால் நெத்தி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் காரில் இருந்த அஜித்பாலாஜியை மீட்டு 108 ஆம்புலன்சு வாகனம் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment