வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சுந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60) இவர் நேற்று முன்தினம் மாலை காக்கதோப்பு பகுதியில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார்.
சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, மேல்பட்டியில் இருந்து குடியாத்தம் நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலையோரம் நின்றிருந்த ஆறுமுகம் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்டதில் அவரின் வலது கால், இடது கையில் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு வாகனம் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற வருகிறார்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய நபர் டூவீலரை அங்கேய விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment