வாக்களித்த பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 19 April 2024

வாக்களித்த பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி


வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலுர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளரும்,  துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர். 


பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக் கொண்டிருக்கிறார். அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.


முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு, மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகவின் தயவு தாட்சியாகம் அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதியதாக வந்ததால் இது அவருக்கு புதுசாக தெரியும். இந்திய உட்டணி வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார் என கூறினார்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad