வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை கருப்பலீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் மூலவரின் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறங்காவலர் குழு தலைவர் ஏ பொன்னம்பலம் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இதில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அறங்காவலர்கள் பரிமளா சிவகுமார் கண்ணன் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மற்றும் நகராட்சி துறை மின்சார வாரியம் காவல்துறையினர் அறநிலையத்துறை அதிகாரிகள் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சென்டை மேளம் கரகாட்ட ஒயிலாட்டம் சிலம்பாட்டத்துடன் தேர் பவனி ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment