சாலையோர மரத்தில் மோதி இளைஞர் பலி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 21 April 2024

சாலையோர மரத்தில் மோதி இளைஞர் பலி.

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மரத்தில் மோதி ஒருவர் பலி. காட்பாடி பிரம்மபுரம் அடுத்த அரும்பருத்தி துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் மகன் ராகுல் (வயது 22) அவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி  மகன் வினோத் குமார் (வயது 22) இருவரும் காட்பாடியில் உள்ள துணி கடையில் துணி எடுக்க சென்றனர்.

இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது குறுக்கே மற்றொரு இருசக்கர வாகனம் வந்ததால் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியதில்  அரும்பத்தி துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த  ராகுல் அதே கிராமத்தைச் சேர்ந்த  வினோத்குமார் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.


உடனடியாக பொதுமக்கள்  உதவியாள் 108 ஆம்புலன்ஸ்  மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராகுல் என்பவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய நண்பர் வினோத்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


ராகுல் என்பவருடைய இறுதி ஊர்வலத்தில் அவருடைய  நண்பர்கள் மற்றும் கபடி குழு விளையாட்டு வீரர்கள் ஊர் பொதுமக்கள் என இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad