வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் தரணம் பேட்டை பஜார் பகுதியில் நீலி கோவிந்தப்ப தெருவில் D R ராஜேந்திரன் அரிசி கடை எதிரில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தையம்மாள் (வயது 75) என்பாரின் தலையில் கல்லை தூக்கி போட்டதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த மூத்தாட்டி அப்பகுதியில் உள்ள கடைகளை சுத்தம் செய்து கூலி வேலை செய்து வருகிறார்.
மேலும் தாக்கிய நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வருகிறது. இது சம்பந்தமாக நகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட நபர் தலைமறைவாக உள்ளார். என்று தெரிய வருகிறது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment