புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர், இதனிடையே தீபாவின் செல்போன் எண்னை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தீபாவின் செல்போன் டவர் வேலூர் அடுத்த குடியாத்தம் ஆர்எஸ் ரோடு பகுதியில் இருப்பதாக காட்டியுள்ளது. மேலும் அவரது செல்போனில் இருந்து கீழ்ஆலத்தூர் அடுத்த சின்னநாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் (வயது 25) என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. தீவிர விசாரணை செய்ததில் அவர் அம்பத்தூர் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்வதும், தீபாவுடன் இவருக்கு பழக்கம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் தீபாவை ஆர்எஸ் சாலை அருகே உள்ள மலை அடிவாரத்தில் கழத்து அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீசார் ஹேமராஜை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே குடியாத்தம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது கழத்து அறுக்கப்பட்டு அழுகை நிலையில் தீபா உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கும் பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஹேமராஜை குடியாத்தம் தாலுகா போலீசாரிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment