வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 April 2024

வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை!

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிளித்தான்பட்டறை பவானிநகர் இரண்டாவது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆரோன் மகன் விஜயகுமார் (வயது 36). இந்நிலையில் இவருக்கு ஆறு மாத காலமாக அதிகமாக வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. மேலும், சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த (23:04:2024) அன்று விஜயகுமாருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. 

வீட்டை விட்டு வெளியில் வராமல் முகம் சோர்வாக காணப்பட்டுள்ளார். இரவு தன் மனைவியுடன் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளனர் மறுநாள் அதி காலை 6:00 மணிக்கு மனைவி எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பேனில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டு ள்ளார்.  உடனே மனைவி சத்தம் போட்டவுடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை கீழ இறக்கி பார்த்தபோது அவர் சில நேரத்திற்கு முன்பாக இறந்தது தெரிய வந்துள்ளது.


உடனே அவரது மனைவி மெரினா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உதவி ஆய்வாளர் கார்த்திக், விஜயகுமார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கும்பறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad