கோடை வெயிலில் தனிக்க அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 April 2024

கோடை வெயிலில் தனிக்க அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி.


வேலூர் மாவட்டம் பழைய மாநகராட்சி கட்டிடம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புரட்சி தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் பொது செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட மாணவரணி தலைவர் VPM.குமார் அவர்களின் ஏற்பாட்டில் பகுதி செயலாளர் S.நாகு (ஏ) நாகராஜன் அவர்கள் தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் SRK அப்பு  பங்கேற்று திறந்து  வைத்தார். இன்று 25.04.2024 காலை 10மணியளவில் பழைய மாநகராட்சி பெரியார் சிலை அருகில் அனைத்து மாநில மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad