வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எஸ் மோட்டூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது. இந்தக் கோழி பண்ணையில் திடீரென்று மின் மின் கசிவு காரணமாக கோழி பண்ணை முழுவதும் தீ பிடித்து சேதாரம் அடைந்தது இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்தன.
இதனை அடுத்து மேலும் தீவு பராமரிக்க குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் இது சம்பந்தமாக தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment