வாக்கு சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்த காவல்துறையினர் அணிவகுப்பு!. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 7 April 2024

வாக்கு சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்த காவல்துறையினர் அணிவகுப்பு!.


நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

 

வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில், உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள 85 சிறப்பு பாதுகாப்பு படையினர் என அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். காட்பாடி விருதம்பட்டில் இருந்து புறப்பட்டு கழிஞ்சூர் வரையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.

 

வாக்காளர்கள் எவ்வித பயமும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு தெம்பு, தைரியமூட்டும் வகையிலும் இந்த கொடி அணி வகுப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. 100 சதவீதம் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்  காவல் துறையினர் கொடி அணிவகுப்பு  நடத்தப்பட்டது.




- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad