வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகத்தில் வனவராக கடந்த 1:4:1984 பணியில் சேர்ந்து இன்று (30.4.2024) பணிவு நிறைவு பெற்ற வனவர் கோ மாசிலாமணி அவர்களுக்கு வன சரக வளாகத்தில் இன்று பணி நிறைவு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் குடியாத்தம் வனசரக அலுவலர் வினோபா ஆகியோர் வனவர் மாசிலாமணி அவர்களின் 40 ஆண்டுகால சேவைகளை பற்றி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள், இந்நிகழ்ச்சியில் வன சரகத்தை உட்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வனத்துறையினர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment