வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சீதாராமர் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சாமி திருவிதியுடன் நடைபெற்றது இதில் மதியம் இரவு நேரங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம கோவில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் பக்த கோடிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment