மீண்டும் துவங்கியது விடைத்தாள் திருத்தும் பணி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

மீண்டும் துவங்கியது விடைத்தாள் திருத்தும் பணி.


வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த 6ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு  கடந்த 12ம் தேதியும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. பதினோராம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,  குடியாத்தம் நடுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பத்தாம் வகுப்புக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், குடியாத்தம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. 

இதற்கிடையே தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் சென்று விட்டதால் கடந்த 18ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 22ஆம் தேதி முதல் மீண்டும் விடைத்தாள் திருத்தும் பணியில் வழக்கம் போல் ஈடுபட்டனர். இந்த பணி வரும் 25ஆம் தேதி முடிவடையும் என்று கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad