வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மே தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பீடி தீப்பெட்டி மாநில பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த வேலழகன் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
உடன் அதிமுகவின் அமைப்பு செயலாளர் வி ராமு, ஒன்றிய செயலாளர் எஸ் எல்எஸ். வனராஜ், டி.சிவா, முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவ பிரகாசம், அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்து கழக மண்டல தலைவர் அக்பர் ஷெரிப், துபாய் வெங்கடேசன், ரமேஷ் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment