சாலை விபத்தில் முதியவர் பலி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 May 2024

சாலை விபத்தில் முதியவர் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர்பேட்டை கிராமம் பேர்ணாம்பட்டு ரோடு லிங்ககுன்றம் பகுதியில்  கிருஷ்ணன் தந்தை பெயர் கோபால் (வயது 61)சலவை தொழிலாளர் என்பவர் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் சாலையோரம் சென்று கொண்டிருந்தபோது .

இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்த  சங்கர் தந்தை பெயர் ஸ்ரீராமுலு என்பவர் மோதியதில் மேற்படி காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

 மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வருகிறது. இறந்த நபருக்கு கிரிஜா என்ற மனைவியும் நேதாஜி என்ற மகனும் மேனகா ரேவதி என்ற இரு மகள்களும் உள்ளனரா்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad