டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 July 2024

டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

குடியாத்தம் ஜூலை 28

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள 35 வது வார்டு ராஜ கணபதி நகர் அருகில்  திருமலை கார்டன் பகுதியில் புதியதாக டாஸ்மார்க் கடை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் உள்ள திருமலை கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் இன்று காலை குடியாத்தம் நகர மன்றத்தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து பகுதியில் பள்ளிகள் கோயில்கள் ரோட்டரி கிளப் நகராட்சி துவக்கப்பள்ளி ஹயக்ரீவர் மஹால் ஏபிஎம் மஹால் அதன் அருகில் உள்ளது இதனால் இப்  பகுதியில்   உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

 மனு பெற்றுக் கொண்டு அப்பகுதியில் டாஸ்மார்க் கடை வராது என்று நகர மன்ற  தலைவர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad