வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன் ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 July 2024

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வசமாக சிக்கிய இருசக்கர வாகன திருடன் !

குடியாத்தம் ஜூலை 27


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சித்தூர் கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக  வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர் இதற்கு அவர் முன்னுக்கும் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் .

அதில் அவர் தாடி அருணாச்சலம் தெரு சேர்ந்த பாலச்சந்தர் மகன் தரணி 34 என்பதும் அவர்  ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பது தெரியவந்தது.  இதை அடுத்து அந்த பைக் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை செய்தனர் அதில் வீட்டில் மறைத்து வைத்திருந்த மேலும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தரணியை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே 10 வழக்குகளும் தற்போது 4 வழக்குகள் உள்ளன.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad