வேலூரில் தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்! மாநிலத் தலைவர் டாக்டர். விஜய்சங்கர் பங்கேற்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 July 2024

வேலூரில் தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்! மாநிலத் தலைவர் டாக்டர். விஜய்சங்கர் பங்கேற்பு!


வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி காந்திநகர், ஹோட்டல் அமிர்தா ஸ்டார் ஹோட்டலில் தென்னிந்திய பத்திரிக்கையாளர்ள் சங்க ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்டத் தலைவரும், மக்கள் கருத்து நாளிதழ் மாவட்ட செய்தியாளர், பாரத தூண்கள் செய்தி உதவி ஆசிரியருமான டாக்டர்.ராஜ்பாபு,மாவட்டச் செயலாளரும், மக்கள் குத்து நாளிதழ் மாவட்ட புகைப்படசெய்தியாளருமான இர்ஃபான் ஆகியோர்தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தினக்குரல் நாளிதழ்  மாவட்டச் செய்தியாளருமான எஸ். துரைராஜ் வரவேற்புரையாற்றி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேஷ் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில அளவில் பத்திரிக்கையாளர்கள் நலனில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும், தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், போர்முனை அஞ்சல் டுடே, மக்கள் குத்து நாளிதழ், அதிரடி சட்டம் ஆகிய பத்திரிகை ஆசிரியர் டாக்டர். ஆ.இர. விஜய்சங்கர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாக பத்திரிக்கையாளர்களுடன் தற்போது நிலவி வரும் பத்திரிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிந்து உங்களுக்காக நான் உங்களுக்காகவே நாங்கள் என சிறப்புரையாற்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு பத்திரிக்கையாளர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நாம் ஒற்றுமையுடன் அயராது செயல்பட வேண்டுமென்றும், பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட விழா ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்களைப்பற்றி உரையாடினார். இதனைத் தொடர்ந்து மாநில தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்து.


இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தேசபக்தி நாளிதழ் மாவட்ட செய்தியாளர் முஜிப்ரகுமான் ,மக்கள் குத்து நாளிதழ் மாவட்ட செய்தியாளரும், மாவட்ட பொருளாருமான பானுநந்தினி, மாவட்ட செயலாளரும், போர்முனை இதழின் மூத்தசெய்தியாளரும், மக்கள் குத்து நாளிதழின் புகைப்பட கலைஞருமான இர்ஃபான், அதிரடி சட்டம் மாவட்ட செய்தியாளர் அங்காளன், மாலை நியூஸ் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் கெஜராஜ், வணக்கம் தமிழகம் நாளிதழ் செய்தியாளர் ரூபன், மக்களாட்சி இதழ் மாவட்ட செய்தியாளர் தென்னரசு, சதர்ன் மெயில், நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மாவட்ட புகைப்படக் கலைஞர் விக்டர், நவ் இந்தியா டைம்ஸ் செய்தியாளர் ராமு மற்றும்உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு இந்த ஆலோசனைக்கூட்டத்தை சிறப்பித்தனர். 


மேலும், விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது, புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது, இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் முஜிப் ரகுமான் நன்றியுரையாற்றி இந்த ஆலோசனைக் கூட்டம்நிறைவுபெற்றது.


- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad