விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடை வழங்கும் விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 July 2024

விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடை வழங்கும் விழா

குடியாத்தம் ஜூலை 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுபேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 5 மணி அளவில் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள்  வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் தனலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்கள் தலைமை உரையாற்றினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம் எஸ் அமர்நாத் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் மற்றும் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் வட்டாட்சியர் சித்ராதேவி  20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜாவித் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அரசு நெல்லூர் பேட்டை மேல்நிலை திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி உள்பட 17 பள்ளிகளில் பயிலும் 857 மாணவர்களுக்கும் 1183 மாணவிகளுக்கும்  1 முதல்  8 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன இறுதியில்
பள்ளி தலைமை ஆசிரியை பொறுப்பு சுபாஷினி நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad